முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை வட்டம் எம்.என்.பாளையம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை வட்டம் எம்.என்.பாளையம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு அம்மா திட்ட முகாமில் 30 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர். ரவி வழங்கினார்.

நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை வட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எம்.என்.பாளையம் கிராமத்தில் நேற்று சிறப்பு அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தாசில்தார் ஆர்.ரவி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் முன்னிலை வகிக்க, துரிஞ்சாபுரம் மண்டல துணை தாசில்தார் அமுல் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 105 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் 2 பேருக்கு பட்டா மாற்றம், 28 விவசாயிகளுக்கு சிறு விவசாய சான்று என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர்.ரவி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வெள்ளைக்கண்ணு, கிராம பிரமுகர் துரைமுருகன், தனி வருவாய் ஆய்வாளர் த.விஜயரங்கன், உள்வட்ட சர்வேயர் சென்னையன், கிராம நிர்வாக அலுவலர்கள் கே.வெங்கடாஜலம், எம்.மதியழகன், கே.ஜெயக்குமார், எஸ்.சீனுவாசன், எஸ்.ஷாஜஹான், மற்றும் கிராம உதவியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சுசிலா நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து