எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் 478 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடும் வகையில் திருமங்கலம்-வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள வடகரை பெரிய கண்மாய் பொதுப்பணித்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த கண்மாய்க்கு தெற்காறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வடகரை அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வடகரை கால்வாய் மூலம் சென்றடைகிறது.இந்த கால்வாயின் நீளம் 1450மீட்டரும்,6மீட்டர் முதல் 10மீட்டர் அகலமாகவும் உள்ளது.சமீப காலமாக திருமங்கலம் நகராட்சி பகுதிகளின் விரிவாக்கத்தால் திருமங்கலம் நகரின் உட்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் குப்பைகள் வடகரை அணைக்கட்டு மற்றும் கால்வாயில் தேங்கி வடகரை கண்மாய்க்கு சென்று விடுகிறது.கழிவு நீர் கால்வாயில் கலப்பதால் ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் வளர்ந்து கால்வாயில் தண்ணீர் செல்வது தடைபட்டு மழைக்காலங்களில் மழைநீர் இழப்பு ஏற்படுகிறது.மேலும் வடகரை அணைக்கட்டு மற்றும் வடகரை கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி டெங்கு பரவிடும் அபாயமும்,சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புகளும் அதிகம் காணப்பட்டது.தொடர்ந்து கழிவு நீர் வடகடை கண்மாய்க்கு செல்வதால் வடகரை கண்மாய் மாசடைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் குண்டாறு வடகரை கால்வாயை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கிடும் வடகரை கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்திடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் திருமங்கலம் வட்டத்திலுள்ள வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளுக்கான துவக்கவிழா பூமிபூஜையுடன் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.மாநில வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் சத்யகோபால் முன்னிலை வகித்தார்.ஏராளமானோர் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று திருமங்கலம் வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடியாரின் மேலான ஆணைக்கிணங்க திருமங்கலம் வட்டத்தில் 478ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடும் வகையிலும்,டெங்குவை கட்டுப்படுத்திடும் வகையிலும் வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்கி நடைபெற்று வருகிறது.வடகரை கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாவதை ஒழித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக வடகரை கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதே போல் டெங்குவை தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு முதலில் எச்சரிக்கையும்,அதற்கு கட்டுப்படாதவர்களுக்க சட்டத்திற்கு உட்பட்டு அபராதம் விதிக்கும் நடைமுறையும் கையாளப்படுகிறது.எப்படியாவது கொசுக்களை ஒழிக்கவேண்டும்,டெங்குவை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்களின் உயிர்களை 100சதவீதம் பாதுகாத்திடும் வகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தமிழக முதல்வர் எடப்பாடியார் வழிகாட்டுதலில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் வடகரை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு கால்வாயில் கழிவு நீர் தேங்குவது நிறுத்தப்பட்டு வடகரை கால்வாயினை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார சீர்கேடும் ஏற்படாமல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும் வடகரை கால்வாயில் கழிவு நீர்கலப்பது நிறுத்தப்பட்டு.இந்த கண்மாயின் மூலம் 478ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் அம்ரித்,உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா,திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,திருமங்கலம் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் ஒன்றியதுணைச் செயலாளர் சுகுமார்,திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி,பொறியாளர் சக்திவேல்,சுகாதார அலுவலர் ராஜ்மோகன்,கட்சி நிர்வாகிகள் பிரபுசங்கர்,உச்சப்பட்டி செல்வம்,சிவன்காளை,கட்டாரிவேல் முருகன்,கலைச்செல்வன்,சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.