எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மல்லிகை அரங்கில் இன்று (15.11.2017) ‘உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர், தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), திருமதி.வி.சத்தியபாமா (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பயனாளிகள் என 785 நபர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10.28 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலுமே வறட்சி ஏற்பட்டால் நிவாரணம் வழங்கியதில்லை. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளார்கள். மேலும் விவசாயிகளின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு வசதியாக பயிர் காப்பீட்டு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் சிறந்த சங்கங்களாக செயல்பட்டு மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவு துறையின் மூலமாக கடன் வாங்கும் நிலைகள் மாறி பல்வேறு மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக ஏரி, குளங்களை தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை வழங்கும் அரசிற்கு உறுதுணையாக இருப்பதோடு, இக்கூட்டுறவுச் சங்கங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று சிறப்பான முறையில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்தும் கிடைக்க சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்கடன், நடுத்தர கால வேளாண்மை கடன் மற்றும் பண்ணை சார்ந்த நீண்டகால கடன் என அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி ரூ.25,000 முதல் ரூ.25 இலட்சம் வரை கடனுதவி மற்றும் 3-ல் ஒரு பங்கு மானியம் வழங்கி வருமானம் ஈட்டிட வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள். விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீதம் வட்டி முறையில் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கம் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது. இன்றையதினம் கடனுதவிகள் பெறும் பயனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கடனுதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளமாறு வாழ்த்துகிறேன் என அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியினை வழங்கி வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக” என்ற கொள்கையினைத் தாரக மந்திரமாகக் கொண்டது கூட்டுறவு அமைப்பாகும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு அரசின் அனைத்து திட்டங்களும் நன்முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பயிர்கடன், உரம், விவசாய இடுபொருட்கள், வேளாண் கருவிகள் ஆகியன வழங்கப்படுகின்றன. மகளிருக்கு சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், சுய உதவிக்குழு கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், சுய தொழில் கடன் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயம், கால்நடை சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், மீன் மற்றும் கால்நடை பராமரிப்பு சங்கம் ஆகிய சங்கங்களின் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பதவி பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மழைக்காலங்களில் நீரை சேமித்திட அந்தந்த மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக ஏரிக்குளங்களை தூர்வாரிட உத்திரவிட்டார்கள். இதனால் மழை நீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசு வழங்கும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிவையொட்டி, பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் 788 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான காசோலைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆவின், மத்திய கூட்டுறவு வங்கி, இப்கோ, கிரிப்கோ, வேளாண் உற்பத்தி, சிந்தாமணி, கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மேலும் விழாவில் பங்கேற்வர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு பொது மேலாளர் /மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) திருமதி.வே.லதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி.தெய்வநாயகம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளம் தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன், கூட்டுறவு சங்கங்கள், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு