எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், கண்ணுடையான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவ, மாணவிகளுக்கும், திருச்சிராப்பள்ளி சாவித்திரி வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 422 மாணவ, மாணவிகளுக்கும், மிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 64 மாணவ, மாணவிகளுக்கும், என மொத்தம் 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று (17.11.2017) வழங்கினார்கள்.
அமைச்சர் பேச்சு
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் எம்.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாட்டை கல்வி வளர்ச்சியில் தன்னிகரில்லாத முதல் மாநிலமாக்கிட வேண்டுமென்று உறுதிபூண்டு அந்த எண்ணத்தை எண்ணியவாறு நிறைவேற்றிட தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு வழங்கி எண்ணில்லடங்கா திட்டங்களை செயல்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்கள்.
அம்மா கொண்டுவந்த பல்வேறு மகத்தான திட்டங்களால் அன்று பள்ளி செல்லத் தயங்கிய குழந்தைகள் இன்று பள்ளிக்கூடம் செல்ல சிட்டாய் பறக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மா பள்ளி மாணவர்களின் கல்விக்கு தேவையான பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, காலணி, மிதிவண்டி, பேருந்து பயண அடடை, நிலவரைபட புத்தகம், கிரையான்ஸ், வண்ணப் பென்சில், ஜியாமென்டிரி பாக்ஸ், புத்தகப்பை, சீருடை போன்ற அனைத்தும் விலையில்லாமல் வழங்கிட ஆணையிட்டு பள்ளி கல்வித்துறையில் மாபெரும் புரட்சி செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் மகுடமாக மாணவ, மாணவியரின் அறிவு விளக்கத்தைத் தூண்டிவிடும் வகையில், விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2011 முதல் இதுவரை 40 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன. 2016-17ம் கல்வியாண்டில் மட்டும் 10,178 மாணவர்களுக்கும், 13577 மாணவிகளுக்கும் என மொத்தம் 23,755 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 40 கோடி மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஊக்கத்தொகை மேற்படிப்பு பயிலுவதற்கு மிகவும் உதவி கரமாக உள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க பள்ளிகள் முதலாக மேல்நிலைப்பள்ளிகள் வரை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கும் வகையில் சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள் பெற்று கல்லூரிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் இருப்பதாக அனைவரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார்.
அமைச்சர் வளர்மதி
விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் வளர்மதி பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா காலத்தில் தான் பள்ளிக்கல்வித்துறையில் ஒரு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் தலைச்சிறந்த துறையாக பள்ளிக்கல்வி துறை செயல்படுகிறது. குழந்தைகளின் ஆரம்பக்கல்வி முதல் அவர்களின் உயர்கல்வி வரை அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் மீது அதிக அக்கறை கொண்டு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். நகர்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இன்று விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. இக்கணினியின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உள்ளங்கையில் வைத்து தங்கள் அறிவை பெருக்கி கொள்ளலாம். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தலைமைசெயலகத்தில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை சந்தித்த போது விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை பாராட்டினார்கள்.
எனவே மாணவச் செல்வங்கள் நன்றாக படித்து சிறந்த பொறியாளராக, மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, வரவேண்டும். நன்றாக படித்து பள்ளிக்கும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரபாண்டியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பத்மநாதன்,மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் டி.வைதேகி(கண்ணுடையான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி), ஆர்.சுசிலா (சாவித்திரி வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஜெயசிம்மன் (மிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி), முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஐயப்பன், முஸ்தபா, மகாலெட்சுமி, மற்றும் வழக்கறிஞர் ராஜ்குமார், அருள்ஜோதி, பாலசுப்ரமணியன், கலீல்ரகுமான், அன்பழகன், சுரேஷ்குப்தா, கண்ணதாசன், வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு