முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய நிலங்களை குஜராத் அரசு அபகரித்து வருகிறது - ராகுல் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்: விவசாய நிலங்களை  குஜராத் அரசு  அபகரித்து வருகிறது மேலும் விவசாயிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி நடத்துவது ஏன்? என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் செய்துவரும் ராகுல் காந்தி, பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் தொடர்பாக விமர்சித்து வருகிறார். நாள்தோறும் ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்சினையை எழுப்பி அதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் தொடர்பாக நேற்று அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:
‘‘விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட வில்லை. அவர்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை. பயிர் இன்சூரன்ஸ் உள்ளிட்டவையும் கிடைக்கவில்லை. அதேசமயம், இந்தி திரைப்பட வில்லன் கப்பார் சிங் அபகரிப்பதுபோல, விவசாய நிலங்களை அரசு அபகரித்து வருகிறது. மேலும் இந்த ஆட்சியில் விவசாயிகள் கடுமையான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். விவசாயிகள் விஷயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது ஏன்? என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்’’ எனக்கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து