எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கதேர் உலா வரக்கூடிய கிரி பிரகாரம் மண்டபத்தில் 50 அடி நீளத்திற்கு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளிடையே சிக்கிய மோர் விற்கும் பெண் நசிங்கி பலியானார். திருப்பூர் பக்தர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது
சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர் வெங்கடேஷ், கிரி பிரகாரம் மற்றும் கட்டிடங்களை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை இன்ஜினியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே பலியானவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண கேட்டு அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் கடலருகே அமைந்து சிறப்பு வாய்ந்தது. இயற்கை எழிலுடன் கோயில் கிரிபிரகாரத்துடன் பார்ப்பதற்கே ஆச்சரியமூட்டும் வகையில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க தேரில் உலா வரக்கூடிய கிரி பிரகாரம் மண்டபம் தூண்களால் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரி பிரகாரத்தின் வள்ளி குகை எதிர்புறம் வடக்கு பிரகாரம், தெற்கு பிரகாரம் திரும்பும் இடத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை சுமார் 50 அடி நீளத்திற்கு நேற்றுகாலை 10.30 மணியளவில் திடீரென எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இடிந்த விழுந்த இடத்தில் மேற்கூரை கனமான கட்டிடங்களாக இருந்ததால் உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இரண்டு ஜே.சி.பி. மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது இடிபாடுகளிடையே சிக்கி திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள்(44) நசிங்கி இறந்தது தெரியவந்தது. இவர் இந்த பகுதியில் உட்கார்ந்து மோர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் சம்பவ இடத்தில் கட்டிடம் விழுந்த போது காயமடைந்த திருச்செந்தூர் சுப்பிரமணியரபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில் ஆறுமுகம்(64), சுவாமி தரிசனத்திற்காக வந்த திருப்பூர் பெருமாள்நல்லூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் கந்தசாமி(74) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் செந்தில்ஆறுமுகம் சம்பவ இடத்தில் சுக்கு காபி வியாபாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். கந்தசாமி முன்னாள் வி.ஏ.ஒ.,வாக பணியாற்றியவவர். மேலும் சம்பவ இடத்தில் இடிந்த கட்டிடங்கள் உடனடியாக சுமார் ஒரு ஒன்றரை மணி நேரத்தில் அகற்றப்பட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த உடனே கோயில் நடைசாத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன், திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., கணேஷ்குமார், தாசில்தார் அழகர், போலீஸ் டி.எஸ்.பி. பாலசந்திரன்(பொறுப்பு), கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜராணி, தாலுகா இன்ஸ்பெக்டர் ரகுராஜன், கோயில் உதவி ஆணையர் ராமசாமி, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம் ஆகியோர் விரைந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர். இடிபாடுகளில் சிக்கி இறந்த பேச்சியம்மாளுக்கு சுமதி(14) மகளும், சுரேஷ்(12) மகனும் உள்ளனர். இவர்கள் 9ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்கின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் கலெக்டர் வெங்கடேஷ் கூறியதாவது:
திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் வடக்குவாசல் அருகே மேற்கூரை சுமார் 20 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்தது. இதில் பேச்சிம்மாள் இடிபாடுகளிடையே சிக்கி இறந்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில் ஆறுமுகம்(64), திருப்பூரைச் சேர்ந்த பக்தர் கந்தசாமி(74) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோயில் பகுதியில் உள்ள 40 முதல் 45 ஆண்டுகள் வரையிலான பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித்துறையினர் சூப்பிரெண்டென்ட் இன்ஜினியர் தலைமையில், வருவாய் துறை, போலீஸ், அறநிலையத்துறை, டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் 5 பேர் அடங்கிய குழுவினர் கட்டிடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இவர்கள் உடனடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இறந்த போன பேச்சியம்மாளின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கலெக்டரோ, அறநிலையதுறை அதிகாரிகளோ நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. பாதிக்கப்பட்ட பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். மறியல் நடத்தியவர்களிடம் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. கணேஷ்குமார், தாசில்தார் அழகர், டி.எஸ்.பி.பாலசந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் 12.45 மணி முதல் 1.15 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அரசு தெரிவித்து நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் குவிந்தனர்.
கிரிபிரகாரம் வரலாறு
மேற்கூரை இடிந்த விழுந்த கிரி பிரகாரம் 1760 அடி நீளம் கொண்டது. கடந்த 1971ம் ஆண்டு சாண்டோ சின்னப்ப தேவர் உபயமாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணி துவங்கியது. இப்பணி 1974ல் நிறைவடைந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த கிரி பிரகாரம் கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அப்போது மேற்கூரையி சேதமடைந்த பகுதிகளை மட்டுமே சீரமைக்கப்பட்டது. கிரி பிரகாரத்தின் பலம், தன்மை குறித்து இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.