முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர்  துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ரஜோரி மாவட்டத்தில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நமது ராணுவ மேஜர் உட்பட 4 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் ஷாபூர் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியாலும் சிறிய ரக பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக இதுவரை 881 முறை போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து