எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் மற்றும் குன்னம் ஆகிய இடங்களில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்
பொங்கல் பரிசு
கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களையும், குன்னம்; ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களையும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். பள்ளி வகுப்பறைக் கட்டிடங்களைத் திறந்து வைத்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, " மறைந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பென்சில் முதல் 14 வகையான உபகரணங்கள் மற்றும் ஏழை மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் போன்ற பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் நகர்ப்புறத்தில் உயர்ந்தும், கிராமப்புறத்தில் குறைந்தும் இருப்பதுபோல் ஒரு தோற்றம் இருந்தது. புரட்சித் தலைவி அம்மா வழியில் தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கல்வித் தரம் மேம்படும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. அதன் விளைவாக இன்று கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களை மிஞ்சும் அளவிற்கு கல்வித் தரம் உயர்ந்து காணப்படுகிறது. மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் என்று இல்லாமல், நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்றால் தான், இன்றைய போட்டி நிறைந்த உலகில் முன்னேற்றப் பாதையில் நடை போட முடியும். கண்டிப்பாக நம் மாணவர்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது.
அதனை மென்மேலும் வளர்த்துக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். சாதாரண மனிதன் கூட முயற்சி செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும். மாணவர்களாகிய நீங்களும் முயற்சி எடுத்து படித்தால், அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியும். விடாமுயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். எனவே மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கவேண்டும். மக்கள் தொகையில் ஆண், பெண் என இருபாலரும் உள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா வகையிலும் உயர்ந்திருக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில், புரட்சித்தலைவி அம்மா அவர்களது வழிகாட்டுதலின் படி தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் கோரிக்கை வைக்காமலேயே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாயாரின் பெயரை தம் பெயரின் முதலெழுத்தாக வைத்துக் கொள்;ளுதல், அரசுக் கடிதத்தில் "இந்தியக் குடிமகள்" என்று எழுதும் முறை போன்றவை தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்தை பறைசாற்றுபவையாகும். அன்னைத் தெரசா புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இல்லத்திற்கே சென்று பாராட்டிய திட்டம் தான் ‘தொட்டில் குழந்தை திட்டம்’ ஆகும். ஏழை எளிய, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. குறிப்பாக பெண்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது, 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தாமல் பட்டமேற்படிப்பு படித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
இந்த கல்வி வளர்ச்சியானது நமது தமிழ்நாட்டிற்;கும,; இந்திய திருநாட்டிற்;கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் மாற்றமில்லை. திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.25,000-ம் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.50000 ம் வழங்கப்பட்டு வந்தது. புரட்சித் தலைவி அம்மா தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல திருமங்கல்யத்திற்கு தங்கம் 4 கிராமிலிருந்து, 8 கிராமாக உயத்தி வழங்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகரத் திட்டமாகும். ஏழை, எளிய சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது." என தெரிவித்தார்.
முன்னதாக குன்னம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் 2018- சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இக்கட்டிடங்களின் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ்(பூம்புகார்), பி.வி.பாரதி(சீர்காழி), வி.ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தியாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு