முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாங்காய் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் இந்தியா முதல்முறையாக பங்கேற்றது.

சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினராகக் கொண்ட எஸ்.சி.ஓ அமைப்பில், இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் புதிதாக சேர்ந்தன. இந்த அமைப்பு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அமைப்பின் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான 2 நாள் ஆலோசனைக் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த அமைப்பில் புதிதாக இணைந்த இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. மேஜர் ஜெனரல் அஜய் சேத் தலைமையிலான குழுவினர் இதில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் உறுப்பு நாடுகள் ராணுவ ரீதியாக இணைந்து செயல்படுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து