எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கான மானிய ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். மேலும், தினகரன் மற்றும் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்புமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரண உதவி
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஜிஆரின் உருவச்சிலை அக்கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது, எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி இருவரும் இனிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினர்.
பிரதமருக்கு அழைப்பு
இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தேதி கொடுத்ததும் விழா நடைபெறும். இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களைமீட்க நடவடிக்கை எடுக்கும் படி பிரதமருக்கும் வலியுறுத்தியுள்ளோம்.
மறுபரிசீலனை...
ஹஜ்பயணத்தின் மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தோம். இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தங்களின் பாதுகாப்பை முன்னிட்டு, தமிழக அரசிடம் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க. தயார்...
ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரன் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும். மேலும் அவர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.கவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 10 ஆண்டுகள் அவர் கட்சியிலே இல்லை. அவர் எங்கு போனார் என்று கூட தெரியாது. அப்போது கட்சி ஏதாவது பாதிப்பை சந்தித்ததா? ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மட்டுமே அவரை பெரிது படுத்துகின்றீர்களே தவிர, மக்கள் யாரும் அவரை நினைக்கவே இல்லை.
உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க எப்போதும் தயாராக உள்ளது. மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளது உட்கட்சி பிரச்சனை, குடும்ப பிரச்சனையை யாராவது வெளியே சொல்வார்களா? அதை பற்றி பொதுவெளியில் விவாதிக்கவிரும்பவில்லை. மதுசூதனனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. அவரும் திருப்தியடைந்து விட்டார்.
பிரதமரை சந்திப்பேன்...
இந்தியாவின் நிதி அறிக்கை தாக்கல் செய்வதக்கு முன்னாள் மத்திய அமைச்சரால் கூட்டம் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் (ஓ.பன்னீர்செல்வம்) புதுடெல்லி செல்கிறேன். தேவைப்பட்டால் பிரதமரை சந்திப்பேன். பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் காவிரி பிரச்னை குறித்து கோரிக்கை வைப்பேன். காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், காவிரிநீர் பங்கீடு குறித்தும் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் தேவை என மத்திய அரசிற்கும், பிரதமருக்கும், கர்நாடக முதல்வருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் ஒரு பயனும் இல்லை.
பங்கிட்டு தர...
நீதிமன்றத்தில் இடைக்கால வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றத்தில் தீர்ப்புவரஇருக்கிற காரணத்தினாலே இந்த மனுவை ஏற்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார்கள். இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசை பொருத்தவரையில் இருக்கிற தண்ணீரை சமமாக பங்கிட்டு விவசாயிகளுக்கு தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியில் உள்ள நிர்வாகிகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வரும்.
பாதிப்பு இல்லை...
நடிகர் கமல்ஹாசன் தனிக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதுபற்றி கருத்து சொல்கிறேன். தனிக்கட்சியானாலும், கூட்டாக கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.கவுக்கு யாராலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. பட்டாசு தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நீதிமன்றத்திலும் இது குறித்துவழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணிவரை சுமார் ஒரு மணிநேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்துவது குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவையொட்டி வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி என்னென்ன நலத்திட்ட உதவிகள் மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை துணைசபாநாயகருமான தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, ஜெயகுமார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வீரமணி, சரோஜா, சீ.வளர்மதி, ராஜலட்சுமி, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மணிகண்டன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, துரைக்கண்ணு, ராமகிருஷ்ணரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், பாடநூல் வாரியத்தலைவர் பா.வளர்மதி, எம்.ஜிஆர். இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர், மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், வழக்கறிஞர் அணி செயலாளர் நவநீதக்கிருஷ்ணன் எம்.பி., மாவட்ட செயலாளர்கள், வி.என்.ரவி, பாலகங்கா, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், முன்னாள் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்,எம்,.டி.ரவீந்திரஜெயன், முன்னாள் கவுன்சிலர் டி.சிவராஜ், ஆயிரம்விளக்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.