முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மாவத் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரும் மனு சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பத்மாவத் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரியம் வழங்கிய சான்றிதழை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவத் திரைப்படத்தில், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திரைப்படம், வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் திரையிட தடை விதித்தன. ஆனால், இந்த தடையை உச்ச நீதிமன்றம் நேற்று நீக்கியது.

இந்நிலையில் பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்ட திரைப்பட தணிக்கை வாரிய சான்றிதழை ரத்து செய்யக்கோரி அவசர மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த படத்தை திரையிடுவதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதுடன், வீணான மோதல்கள் ஏற்பட்டு மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
‘‘சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டிய எங்கள் கடமை அல்ல. அது, மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பத்மாவத் திரைப்படம் தொடர்பாக நேற்றே எங்கள் உத்தரவை பிறப்பித்து விட்டேம். திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட பின், இதில் வேறு ஒருவர் தலையிடுவதை அனுமதிக்க முடியாது’’ எனக் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து