முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் எல்.ஐ.சி ஊழியர்கள், முகவர்கள் மனித சங்கிலி போராட்டம்

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

தேனி -பெரியகுளத்தில், தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் எல்.ஐ.சி கிளையை சேர்ந்த  ஊழியர்கள் மற்றும் முகவர்கள் நேற்று அரசு போக்குவரத்து பணிமனை முன்பு இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கான ஜி.எஸ்.டி வரியை நீக்க கோரியும், பொதுத்துறை இன்சூரன்ஸ் பங்குகள் வெளியிடுவதை நிறுத்த கோரியும், மனித சங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு இந்திய மக்கள் இயக்க தலைவர் அன்புக்கரசன் தலைமை தாங்கினார். பெரியகுளம் எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர் சரவணக்குமார், உத்தமாளையம் கிளை ஊழியர் சங்க தலைவர் ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை கோட்ட ஊழியர் சங்க பொருளாளர் மகாலிங்கம் துவக்கவுரையாற்றினார். சுரேஷ்குமார் முகவர்கள் ராமமூர்த்தி, தெய்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். திரவியம் நன்றி கூறினார். இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து