முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 11,500 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியை கண்டுபிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை நாடும் சி.பி.ஐ.

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை சி.பி.ஐ நாடியுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாயை மோசடியாக பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள நிரவ் மோடி கடந்த மாதமே தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி அமியும், நிரவ் மோடியின் தொழில் பங்குதாரரும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெஹல் சோஸ்கியும் வெளிநாடு சென்றுள்ளனர். இவர்களில் நிரவ் மோடியின் மனைவி அமி, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். நிரவ் மோடியின் சகோதரர் நிஷால் பெல்ஜியம் நாட்டு குடியுரிமை பெற்றவர்.

அவர்களை கண்காணிக்கப்படும் நபர்களாக சி.பி.ஐ ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.ஐ, நிரவ் மோடி உள்ளிட்டவர்களை கண்டுபிடிக்க இண்டர்போலின் உதவியை நாடியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளில் அவர் தங்கியிருந்தால், அவரை கண்டுபிடித்து அழைத்து வர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து