முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு குமராட்சி ஒன்றிய கழகத்தின் சார்பில் அன்னதானம்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      கடலூர்
Image Unavailable

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா  அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய கழகத்தின் சார்பில் குமராட்சி கடை வீதியில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாள்

நிகழ்ச்சிக்கு குமராட்சி ஒன்றிய கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமை தாங்கினார். குமராட்சி ஒன்றிய கழக நிர்வாகிகள் செல்வகணபதி, இளஞ்செழியன், எள்ளேரி பிரபு, கே.டி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை கிளை செயலாளர் அரிசக்திவேல் வரவேற்புரையாற்றினார். நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.  நிகழச்சியில் முன்னாள் அமைச்சர் செல்விஇராமஜெயம், மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து