முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      தமிழகம்
Election 2024-04-08

சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி முடியும் வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதன் காரணமாக தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அனைத்து சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தேர்தல் நிறைவடைந்த நிலையில் அனைத்து அலுவலகங்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். 

அந்த மனுவில், பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் மீது ஓரிரு நாளில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து