முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் 18,000 பேரை பலி வாங்கிய 7-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ : சுனாமி பாதிப்பின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11-இல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 9.0 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கத்தையடுத்து பிற்பகல் 2.46 மணி அளவில் எழுந்த மிகப்பெரிய சுனாமி அலை, டோக்கியோ மற்றும் வடகிழக்கு கடற்கரையோரப் பகுதிகளை ஆக்ரோஷமாக தாக்கியது.

அதில், 18,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்களை சுனாமி அலை விழுங்கியது. அத்துடன் புகுஷிமா அணு உலையும் பழுதடைந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சுனாமி அலை பாதிப்பின் 7-ஆவது நினைவு தினம் ஜப்பானில் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. சுனாமி அலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஷின்úஸா அபே அஞ்சலி செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து