முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதால் சிறுமி உயிரிழப்பு

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, வீட்டில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சிறுமியை ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை தெரிவித்ததாவது,

தீதிக்ஷா கிரண் ராவுல் எனும் 10 வயது சிறுமி அம்பாட் எனும் ஊரில், தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கயிறு அவரது கழுத்தைச் சுற்றி இறுக்கியது. சற்று நேரத்தில் தீதிக்ஷாவின் தந்தை அந்த சிறுமியை நாசிக் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் தீதிக்ஷா மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இச்சிறுமியின் உயிரிழப்பை அம்பாட் காவல்நிலையம் இது ஒரு தற்செயலான மரணம் என பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து