முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டில் போக்குவரத்து காவல்துறை சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு- வத்தலக்குண்டில்  போக்குவரத்து காவல்துறை சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்ட் சக்திவேல் நிலக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்ட் கார்த்திகேயன் ஆகியோர் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ராஜன், சார்பு ஆய்வாளர் பிச்சைக்காரன் மற்றும் போக்குவரத்து காவல்துறை போலீசாருடன் வத்தலக்குண்டு வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள், பழனி முருகன் பக்தர்களுக்கும் போக்குவரத்து காவல்துறை சார்பாக இருசக்கர வாகனம் தலைகவசம் அணிந்து ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. வாகன காப்பீடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். சுhலை விதிகளை மதிக்க வேண்டும். சரக்க வேன்களில் ஆட்களை ஏற்றி செல்லக் கூடாது. தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது உள்பட் 20 விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி சாலை விதிகளை மதித்து விலை மதிப்பில்லா உயிரினை காப்பாற்றி நலமுடன் வாழ கேட்டுக் கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து