முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு முன்னாள் அதிபர் கயூம் மீது தீவிரவாத புகார்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமினுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் அண்மையில் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து, தமக்கு எதிராக செயல்பட்ட எம்.பி.க்களை அப்துல்லா யாமின் தகுதி நீக்கம் செய்தார். மேலும், அரசுக்கு எதிராக சதி செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். எனினும், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கைது செய்யப்பட்ட அனைவரையும் கடந்த மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது. 12 எம்.பி.க்கள் தகுதி நீக்கத்தையும் ரத்து செய்தது.

இந்த உத்தரவை செயல்படுத்த மறுத்த அதிபர் அப்துல்லா யாமின், அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால், அங்கு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அப்துல்லா சையது, நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்நாட்டின் முன்னாள் அதிபர் மவ்மூன் கயூம், 4 எம்.பி.க்கள், முன்னாள் காவல் ஆணையர் உள்ளிட்ட 9 பேரையும் ராணுவத்தினர் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்கள் 9 பேர் மீதும் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளை ராணுவம் நேற்று பதிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. எந்த அடிப்படையில் அவர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்து ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து