முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலம் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் பங்குனி உத்திரம் திருநாள்

சனிக்கிழமை, 31 மார்ச் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சேலம் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் பங்குனி உத்திரம் திருநாள் சேலம் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் பங்குனி உத்திரம் திருநாளை முன்னிட்டு பால் குடம் ஊர்வலம் மற்றும் தேரோட்டம் நிகழச்சி நடைப்பெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர், தொடர்ந்து முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்..... சேலம் ஜங்ஷன் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம், இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் தமிழ் மாதங்களில் பல்வேறு விழாக்களும், நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதே போல இந்த ஆண்டும் பங்குனி மாத நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் பங்குனி மாத உத்திரம் திருநாளை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதனை தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலையில் குதிரை, காமதேனு வாகனம் என பல்வேறு வாகனங்களில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில் பங்குனி உதிரத்தின் முக்கிய வைபவமான பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது, அதிகாலை முதல் வினாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம், மற்றும் பால், இளநீர்,பஞ்சாமிருதம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து அருள்வாக்கு சோமசுந்தரம் தலைமையில் மஹா ஹோமம் நடைபெற்றது, பின்னர் பக்தர்கள் காவடி எடுத்து முருகபெருமானுக்கு நேர்த்திகடனை செலுத்தினர், மாலையில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், குழந்தை இல்லா தம்பதியர் குழந்தை வரம் வேண்டியும் என பல்வேறு வேண்டுதல்களுக்கு குழந்தைகள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேரப்ட்டோர் பால் குடம் எடுத்து திருக்கோயிலை ஊர்வலமாக வந்து நேர்த்திகடனை செலுத்தினர். இதனை தொடந்து உற்சவ மூர்த்தியான முருக பெருமானை பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தி பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தேரை வடம் பிடித்து இழுத்தனர், இந்த தேரானது திருக்கோவிலின் வெளி பிரகாரத்தில் வளம் வந்து மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்து. பின்னர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது, பின்னர் மூலவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது, இந்த வைபவத்தை காண அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு பங்குனி உத்திர தேரை இழுத்தும், முருகப்பெருமானை வழிபட்டு தரிசனம் செய்தனர், இந்த வைபவத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து