முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் திரையிட முடிவு

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பணிகள் முடங்கின

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சினிமா தொடர்பான பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன. வழக்கமாக கோடை விடுமுறையையொட்டி தியேட்டர்களில் புதிய படங்கள் போட்டி போட்டு வெளியாகும். ஆனால் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் காரணமாக பழைய படங்களும், பிறமொழி படங்களும் மட்டுமே தியேட்டர்களில் ஓடுகின்றன.

வேலை நிறுத்தம்

இதன் காரணமாக, பெரும்பாலான தியேட்டர்கள் காலியாக உள்ளன. எனவே, தொழிலாளர்கள் சம்பளம், தியேட்டர் பராமரிப்பு ஆகியவற்றுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை உள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்களுடன் தியேட்டர் அதிபர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது. எனவே, புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

நேரடியாக ஒளிபரப்பு

இந்த நிலையில், தெலுங்கு பட அதிபர்களும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, வருகிற 8-ந்தேதி முதல் தெலுங்கு படங்களும் தமிழக தியேட்டர்களில் வெளியாகாது. ஓடும் தெலுங்கு படங்களும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சினிமா தியேட்டர்களின் வருமான இழப்பை தவிர்க்க, தமிழக தியேட்டர்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் தியேட்டர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஒருசில தியேட்டர்கள் சார்பில் ஐ.பி.எல். போட்டியை திரையிட அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து