முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய அதிபர் கிம்முடன் அமெரிக்க புலனாய்வுத் துறை தலைவர் ரகசிய சந்திப்பு?

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங் : அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பாப்பியோ வடகொரிய அதிபர் கிம்மை ரகசியமாக சந்திந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்மாத தொடக்கத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் அசோசியேட் பிரஸ் போன்றவை தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளன. இதனை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இது தொடர்பான செய்தி குறித்து பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உடனான சந்திப்பில் டிரம்ப் பேசும்போது, நாங்கள் வடகொரியாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனை காரணமாக அமெரிக்கா- வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவியது. வடகொரியாவின் மீது அமெரிக்கா ஐ.நா. சபையில் பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது.

எனினும் இதனை சற்றும் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தியது. இதன் காரணமாக வடகொரியாவை அச்சுறுத்தும் நோக்கத்தில் தென் கொரியாவுடன் இணைந்து கொரிய எல்லையில் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து