முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கைத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்தவும்  தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தமிழக அரசின் மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்த அனுமதி அளித்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. தேர்தலை நடத்தி விட்டு மே 3-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து