முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திங்கட்கிழமை, 14 மே 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, -சிவகாசியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட , இளைஞரணி செயலாளர் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின மாவட்ட கழக துணைச்செயலாளர் சுரேஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் தங்கவேல் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பிரதிநிதி கனிப்பு(எ)முனியசாமி தலைமையில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் மற்றும் இளைஞர்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் திருத்தங்கல் அ.தி.மு.க. நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சசிக்குமார், கிருஷ்ணமூர்த்தி சிவகாசி தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜா, சிவகாசி சுரேஷ், திருத்தங்கல் நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் எம்.கே.என்.செல்வம், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் பள்ளபட்டி கே.அழகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து