முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசிய காவல்துறை தலைமையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் தற்கொலை தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      உலகம்
Image Unavailable

சுராபாயா : இந்தோனேசியாவின் சுராபாயா நகர காவல்துறை தலைமையகத்தில் மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

8 வயது சிறுமியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் நடத்திய இந்தத் தாக்குதலில், 10 பேர் காயமடைந்தனர்; அந்தச் சிறுமியும் காயங்களுடன் உயிர் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர். ஏற்கெனவே, இதே நகரின் 3 கிறிஸ்துவ தேவாலயங்களில் இரு சிறுவர்களை அழைத்து வந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் பலியான நிலையில், மறுநாளே அதே போன்று மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய காவல்துறை தலைவர் டிதோ கர்ணாவியன் கூறியதாவது:

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுராபாயா நகரிலுள்ள காவல்துறை தலைமையகத்துக்கு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள், தலைமையக வாயிலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அடுத்தடுத்து வெடிக்கச் செய்தனர். அந்த மோட்டார் சைக்கிள்களில் 8 வயது சிறுமி உள்பட 5 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குண்டுவெடிப்பில் அந்தச் சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவரது தாய், தந்தை, இரு சகோதரர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில், போலீஸார் உள்பட 10 பேர் காயமடைந்தனர் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து