முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமாக கருதும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் சம்மதம்

வியாழக்கிழமை, 17 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஓரினச்சேர்க்கையை சட்ட விரோதமாக கருதும் இந்திய தண்டனைச் சட்ட பிரிவை நீக்குமாறு ஐ.ஐ.டி. மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க சுப்ரீம் கோர்ட் சம்மதித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின் படி ஓரினச்சேர்க்கை குற்றமாகும். இந்தச் சட்டத்தை எதிர்த்து ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் உட்பட 20 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவு, இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15, 16, 19 மற்றும் 21 ஆகியவற்றிற்கு எதிரானதாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் நேற்று ஏற்றுக்கொண்டது. ஆனால், மனு மீதான விசாரணை எந்த தேதியில் நடைபெறும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் படி பாலியல் வல்லுணர்வுக்கு வழங்கப்படும் தண்டனைகள் ஓரினச்சேர்க்கைக்கும் பொருந்தும் என்ற வகையில் இருந்தது.  முன்னதாக கடந்த 2009- ம் ஆண்டில், ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் வழங்கியது. பின்னர், 2013- ல் சுப்ரீம் கோர்ட், டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்து ஓரினச் சேர்க்கை மீண்டும் தண்டனைக்குரிய குற்றமாக கருதி உத்தரவிட்டது. அதை தொடர்ந்து 2013-ல் வழங்கிய தீர்ப்பை மறுபரீசிலனை செய்வதாக சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்தது.

இதையடுத்து, கடந்த மாதம் ஓட்டல் அதிபர் கேஷவ் சூரி என்பவரும் ஓரினச்சேர்க்கையை சட்ட விரோதமாக கருதக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வரிசையில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட் நேற்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து