முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே. அதிர்ச்சி தோல்வி: பிட்ச் கடினமாக இருந்தது என்கிறார் தோனி

சனிக்கிழமை, 19 மே 2018      விளையாட்டு
Image Unavailable

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் பேசிய தோனி, 2வது பாதியில் பிட்ச் மேலும் கடினமானது. யாரும் மிடில் செய்ய முடியவில்லை. பவுலர்கள் நன்றாக வீசினர். இந்தப் பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பதை கணிக்க முடியவில்லை. எது தவறாக முடிந்தது என்று பார்த்தோமானால் அது குறித்து நாம் மிகவும் எதார்த்த அணுகுமுறையே மேற்கொள்ள வேண்டும். அதாவது ஏன் ஏதோவொன்று தவறாகப் போகிறது என்பது பற்றி நாம் நடைமுறை ரீதியாகவே யோசிக்க வேண்டும்.

எங்களுக்குக் காரணங்கள் தெரியும். புள்ளிகள் அட்டவணையை பார்க்கக் கூடாது என்பது முக்கியம். மிடில் ஆர்டரிலும் கூட்டணி அமைக்க வேண்டும். உடல் ரீதியாக என்பதை விட மனரீதியாக தயாராக இருக்க வேண்டும். பவுலர்களுக்கு நாம் 100 வித்தியாசமான திட்டங்களை வழங்கலாம் ஆனாலும் சில வேளைகளில் பவுலர்களை மாற்றிப்பார்க்கவே வேண்டியுள்ளது என்றார்.

டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறும்போது, உண்மையில் இந்த வெற்றிக்காக ஏங்கினோம். திருப்திகரமான வெற்றி. இந்தப் பிட்சில் பேட் செய்வது சுலபமல்ல. கடைசி ஓவர் ரன்கள் மிக முக்கியமானது. எங்களுக்குத் தயாரிப்புகளில் எதுவும் பிரச்சினைகள் இல்லை. மாறாக செயல்படுத்துவதில் பிரச்சினை இருந்தது. பேட்டிங், பீல்டிங், பவுலிங் கிளிக் ஆனது வென்றோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து