எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ரஷ்ய அரசு நிறுவனமான ரொசாட்டம் உலகின் முதல் மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரொசாட்டம் நிறுவனம்தான், கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய விஞ்ஞானியான மிக்கெய்ல் லோமோனோசவ் நினைவாக அகடமிக் லோமோனோசவ் என்று இந்த மிதவை அணு மின் உற்பத்தி நிலையத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்கள் கால் பதிக்கவே சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ள சவால் நிறைந்த இடங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்வதற்கும், போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் புவியியல் அமைப்பு போன்றவை குறித்து கேள்வி எழுப்ப இயலாத சூழல்களிலும் பயன்படுத்த இது ஏற்றது. விரிவாக்கப்பட்ட கடற்பரப்புகளுக்கும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கும், வலுவான மின்கட்டமைப்பு இல்லாத இடங்களுக்கும் கூட இந்த அணு மின் உற்பத்தி நிலையம் உகந்தது.
40 ஆண்டுகள் வரை செயல்படும்
தற்போது பூமிக்கடியில் இருந்து பெறும் நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கான செலவில் - 40 சதவீதம் வரை, இந்த எரிபொருளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காக செலவிடப்படுகிறது. அதோடு, பயணம் செல்ல சிரமமான இடங்களாக இருந்தால், அங்கு இந்த உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. மாறாக ‘அளவில் சிறிது - எடையில் குறைவு - ஒரே விலை’ போன்ற அம்சங்கள் கொண்ட மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையங்களை பல இடங்களில் அமைப்பதன் மூலம் பல சிரமங்களைத் தவிர்க்கலாம். இந்த சிறிய வகை அணு உலைகள் தொடர்ந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை இடைவேளையின்றி செயல்படக் கூடியவை. அதனால், மின் உற்பத்திக்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும்.
இந்த மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையத்தில் கே.எல்.டி.-40சி வகையிலான 2 அணு உலைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும், தலா 50 மெகாவாட் திறன் கொண்டவையாகும். இந்த புது உலைகள் முந்தைய உலைகளை விட அளவில் சிறிதாக இருந்தாலும், திறன் கணிசமாகவே அதிகரித்திருக்கும். இவற்றைச் சுமக்கும் கப்பல் 144 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் 21,000 டன் தண்ணீரை இடம் பெயர்க்கும் திறன் கொண்டது.
இந்த மிதக்கும் மின் உற்பத்தி நிலையம், 40 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியது. அதை மேலும் அதிகரித்து, 50 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்தலாம். அந்த ஆயுள் முடிவில், இதைத் தனியாக இழுத்துச் சென்று, உடைத்து, அதில் உள்ள அணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யலாம். இதற்கான தனி கிடங்கு அமைந்துள்ள இடத்துக்கு இந்த மின்நிலையம் இழுத்துச் செல்லப்படும் என்பதால், அதன் அணுக்கதிர் எச்சங்கள் பின்தங்கிவிடும் என்ற அச்சம் தேவையில்லை.
50 ஆயிரம் பேருக்கு மின்சப்ளை
தற்போது ரஷ்யத் துறைமுக நகரான மர்மேந்ஸ்க்-ல் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த மிதவை அணு மின் நிலையம், எரிபொருள் நிரப்பப்பட்டபின், ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் உள்ள சுக்காட்கா பகுதியின் பெவெக் நகருக்கு இழுத்துச் செல்லப்படும் பயணத்தின் சராசரி வேகம் - மூன்றரை முதல் நான்கரை கடல் மைல்கள் வரை இருக்கும்.இதைக் கடற்கரையில் நிறுவ தேவையான அனைத்துக் கட்டுமானப் பணிகளும் தற்போது பெவெக்-ல் நடைபெற்று வருகிறது. இந்த மின் நிலையத்தை கடற்கரையில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும், அதன் மின் உற்பத்தித் தொடங்கி… அதைத் தொடரவும், மின் விநியோகத்தை முன்னெடுக்கவும் தேவையான கட்டுமானப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பின், அங்குள்ள மின் கட்டமைப்பில் இம்மின் நிலையம் இணைக்கப்படும். இந்த இணைப்புப் பணி முடிந்து 2019-ல் மின் உற்பத்தி தொடங்கும்போது - உலகில் செயல்படும் நிலையில் உள்ள ஒரே மிதவை அணு மின் உற்பத்தி நிலையம் என்ற பெயரைப் பெறுவதுடன், உலக வரைபடத்தின் வடகோடியில் அமைந்துள்ள அணு மின் நிலையமாகவும் லோமோனோசவ் மாறும்.தற்போது நிலக்கரி கொண்டு அனல் மின் உற்பத்தி செய்யும் ஒரு நிலையத்துக்கும், மற்றொரு பழைய அணுமின் உற்பத்தி நிலையமான பிலிப்பினோவுக்கும் மாற்றாக இது அமையும். இந்த புதிய அணு மின் நிலையத்தால் அங்குள்ள 50,000 மக்கள் மின்சார சப்ளை பெற்று பயன் பெறுவர். இது மட்டுமின்றி, ஆண்டுக்கு பல ஆயிரம் டன் கரியமில வாயு உற்பத்தியாவதைத் தடுத்து, ஆர்டிக் துருவப் பகுதியில் கார்பன் படிவைக் குறைக்கவும் இது உதவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.