முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

ஷாங்காய், சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லை என்று பிரதமர் மோடி மறைமுகமாகக் கூறினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு, சீனாவின் குயிங்டோ நகரில் நடந்தது.

சீனா-பாகிஸ்தான் இடையே 5,000 கோடி டாலர் செலவில் பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது. இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சரக்குகளை கொண்டு செல்வதற்காக, 7,200 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள சாப்ஹர் துறைமுகத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் அந்த வழித்தட திட்டத்துக்கு, இந்தியாவைத் தவிர, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், நாட்டின் இறையாண்மை புறக்கணிக்கப்படுவதாக கூறி, அந்த திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மாநாட்டின் நிறைவில், சீனாவின் பொருளாதார வழித்தடத் திட்டத்தை ஆதரித்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளான ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்தன. ஆனால், இந்தியா மட்டும் ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து