முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த நவாஸ் கட்சி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை நடத்தியதை  இந்தியாவும் பின்பற்ற வேண்டும்என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸின் சகோதரர் ஆவார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சிதான் இப்போது அந்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ளது.

இது தொடர்பாக ஷாபாஸ் ஷெரீப் சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசி இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. கொரியப் போரில் இருந்து பகைமை பாராட்டி வந்த அமெரிக்காவும், வடகொரியாவும் இப்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆணு ஆயதங்களைப் பயன்படுத்துவோம் என்ற ரீதியில் மோதல் போக்கையும், பகைமையையும் கொண்டிருந்த அந்த இரு நாடுகளும் பேச்சு நடத்தும்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் ஏன் பேச்சு நடத்த முடியாது? காஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும் முதலில் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். அமெரிக்காவும், வடகொரியாவும், இந்தியா-பாகிஸ்தானுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து