எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருச்சியில் பேட்டி
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து திருச்சி சென்றார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பங்கு நீர் கிடைக்க வேண்டும்
டெல்லியில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில், உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தினுடைய கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டினுடைய, காவிரி நதிநீர் ஆணையத்திற்கும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிற்கும் உறுப்பினர்களை நியமித்து விட்டார்கள், கேரளாவிற்கும் நியமித்து விட்டார்கள். பாண்டிச்சேரியிலும் நியமித்து விட்டார்கள், ஆனால் கர்நாடகம் இன்னும் நியமிக்கவில்லை. இது மத்திய அரசுக்கு வலியுறுத்தி கூறப்பட்டிருக்கிறது, விரைந்து உறுப்பினர்களைப் பெற்று, காவிரி ஆணையத்தினுடைய கூட்டம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைத்து, நமக்குக் கிடைக்கவேண்டிய பங்கு நீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து குறிப்பிட்டிருக்கின்றேன். பிரதமர் மோடியிடமும் இது வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது.
அணையை திறப்பது எப்போது?
மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி வந்தால்தான் நீரை திறந்து விடமுடியும். இப்பொழுது கர்நாடகாவில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது, விரைவாக மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கின்றோம். எங்களைப் பொறுத்தவரைக்கும், ஆணைய கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டுமென்று ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது, மத்திய அமைச்சர் கட்காரிக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இப்பொழுது, நிதிஆயோக் கூட்டத்திலே கலந்து கொண்டு பேசும் பொழுதும், இது வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது. மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சரை சந்திக்கின்ற பொழுதும் இது பற்றி விரிவாக பேசப்பட்டிருக்கிறது.
கேள்வி: இந்த மாத இறுதிக்குள் மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பி விடுமா?
பதில்: இறைவனிடம்தான் இருக்கிறது. நம்மைப் பொறுத்தவரைக்கும் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைத்து, விரைவாகக் கூட்டத்தைக் கூட்டி, நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதற்குண்டான வழிவகை செய்ய வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி கூறியிருக்கிறோம்.
கேள்வி: தங்கத்தமிழ்ச்செல்வன் உட்பட 8 எம்.எல்.ஏ-க்கள் உங்கள் அணியில் இணையப் போவதாக சொல்கிறார்களே, உண்மையா?
பதில்: தெரியவில்லை, நீங்கள்தான் சொல்கிறீர்கள், வந்து இணைந்தால் பாராட்டுக்குரியதுதான்.
கேள்வி: அவர்கள் வந்தால், அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக சொல்கிறார்களே?
பதில்: எப்படி அமைச்சர் பதவி கொடுக்க முடியும்? நீங்கள் எல்லோரும் விவரம் தெரிந்தவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள், சட்டம் தெரிந்தவர்கள், நீங்கள்தான் பத்திரிகையில் வெளியிடுகிறீர்கள், பெரும்பாலான மக்களும் இதைப் பார்த்து, படித்துத்தான் தெரிந்து கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சட்டரீதியாக உங்களுக்குத் தெரியும்.
கேள்வி: இடைத்தேர்தல் வரவேண்டுமென்பதற்காக டி.டி.வி. அணி திட்டமிட்டு செய்வதாக சொல்கிறார்களே?
பதில்: நீங்கள் தான் சொல்கிறீர்கள், அப்படி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், சட்ட ரீதியாக அனைத்துமே தெரியும். இன்றைக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது எப்படி இடைத்தேர்தல் வரும்? இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் பேட்டி
பின்னர் அவர் மயிலாடுதுறை சென்றார். அங்கும் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் காவிரி குறித்தும், எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்தும் பேசினார்.
அதில், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இனிதான் தீர்ப்பு வரும். மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் 18 பேரும் மீண்டும் வந்தால் நல்லதுதான். அவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ள நாங்கள் தயார். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது. அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நினைக்கிறேன். தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.
காவிரி ஆணைய உறுப்பினர்களை கர்நாடகா விரைவில் அறிவிக்க வேண்டும். காவேரி ஆணைய கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காவிரியில் நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இப்போதுதான் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. போதிய நீர் வந்தவுடன் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வரும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.