முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : ஐஸ்லாந்து அணிக்கு எதிரான பெனால்டி கிக் வாய்ப்பை தவற விட்டது வேதனையளிப்பதாக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில்  டி பிரிவில் பெற்ற ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்தது. இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி பெனால்டி கிக் வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினார். 12 அடி தூரத்தில் இருந்து அவர் உதைத்த பந்தை, ஐஸ்லாந்து கோல்கீப்பர் ஹால்டோர்ஸன் வலது புறமாக பாய்ந்து அற்புதமாக தடுத்தார். இதன் பின்னர் கிடைத்த இரு பிரி கிக் வாய்ப்புகளையும் மெஸ்ஸி சரியாக பயன்படுத்தத் தவறினார்.
ஆட்டம் முடிவடைந்ததும் மெஸ்ஸி கூறும்போது,

பெனால்டி கிக் வாய்ப்பை தவற விட்டது வேதனையளிக்கிறது. ஏனெனில் அது வெற்றிகரமானதாக அமைந்திருந்தால் தீர்க்கமான முன்னிலையை அடைந்திருப்போம். போட்டியை டிராவில் முடித்தாலும் நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை. இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் என்றே நினைக்கிறேன். ஐஸ்லாந்தின் டிபன்ஸில் இடைவெளியை கண்டுபிடிக்க முயன்றோம். ஆனால் எங்களால் அது முடியாமல் போனது. குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக சில நாட்கள் ஓய்வு உள்ளது. இது சிறப்பான முறையில் தயாராக உதவும். தொடக்க ஆட்டத்தில் ஒரு புள்ளி எடுத்தால் போதும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனாலும் இது முதல் ஆட்டம்தான். யாரும் எதையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இது உலகக் கோப்பையும் கூட, அனைத்து ஆட்டங்களும் நெருக்கமாகவே இருப்பதை பார்த்தாலே புரியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து