முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் குறித்த ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கை தவறான தகவல் ஐ.நா. சபையில் இந்தியா குற்றச்சாட்டு

புதன்கிழமை, 27 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கை தவறான தகவல், ஒருதலைபட்சமானது, உள்நோக்கம் கொண்டது என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சந்தீப் குமார் கூறியுள்ளார். மேலும், வெற்று கோஷங்களால் உண்மையை எப்போதும் மறைக்க முடியாது என்றும், காஷ்மீர் குறித்து தவறான தகவலை பாகிஸ்தான் ஐ.நா. பொது சபையில் பதிவு செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா அறிக்கை...
ஐ.நா. மனித உரிமை அமைப்பு சமீபத்தில், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. ஐ.நா. பொது சபையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய பாகிஸ்தான், காஷ்மீரில் அனைவரும் சமமான உணர்வுடன் நடத்தப்படுவதாக போலி தகவலை இந்தியா பரப்பி வருவதாக குற்றம்சாட்டியது.

ஒருங்கிணைந்த பகுதி...
இதற்கு பதில் அளித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சந்தீப் குமார் கூறுகையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை யாராலும் மாற்ற முடியாது. பாகிஸ்தான் மறுபடியும் காஷ்மீர் குறித்து தவறான தகவலை ஐ.நா. பொது சபையில் பதிவு செய்ய பயன்படுத்தி இருக்கிறது. வெற்று கோஷங்களால் உண்மையை எப்போதும் மறைக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஒருதலைபட்சமானது...
மேலும் அவர் பேசுகையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கை தவறான தகவல், ஒருதலைபட்சமானது, உள்நோக்கம் கொண்டது. இது இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து