முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணிக்கைகளை செலுத்துவதற்காக இந்தோனேசியா எரிமலை மீது ஏறி நின்று வழிபடும் மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

பாலி : இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் பரோமா எரிமலை மீது மக்கள் ஏறி நின்று காணிக்கைகளை சமர்ப்பித்து வித்தியாசமான சடங்கு செய்துள்ளனர். இந்தோனேசியாவில் இந்த திருவிழா எல்லா வருடமும் ஜூலை மாதம் நடக்கும். பல்வேறு நாடுகளில் இருந்து இந்த சடங்கில் நம்பிக்கை உள்ள மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துவார்கள். எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி வழிபாடு நடத்துவார்கள்.

இந்தோனேசியாவின் ரோரா ஆண்டங் என்ற மன்னன், வாரிசு இல்லாமல் கஷ்டப்பட்ட போது, கடவுளிடம் வேண்டி வாரிசு பெற்று இருக்கிறான். அப்போது இந்த எரிமலைக்கு காணிக்கை அளிப்பதாக சத்தியம் செய்துள்ளான். அதில் இருந்து மக்களும் இந்த எரிமலைக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள். முக்கியமாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

இந்த எரிமலையில் பயிர்கள், பழங்கள், காசு என்று வித்தியாச வித்தியாசமான காணிக்கைகளை செலுத்துவார்கள். அதேபோல் ஆடு, மாடு, கோழி என்று உயிருள்ள பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் அந்த பகுதிக்கு வருகிறார்கள்.

வறுமையில் இருக்கும் பக்கத்து கிராம மக்கள், அந்த எரிமலையில் விழும் பொருட்களை வித்தியாசமாக வீட்டிற்கு எடுத்து வருகிறார்கள். இதற்காக, பெரிய வலைகளை வைத்து காணிக்கை பொருட்களை உள்ளே விழுவதற்கு முன்பு அதை பிடித்து, எடுத்து செல்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து