முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப் பிரதேசத்தில் போலி என்கவுன்ட்டர்: விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் அதிகமான போலி என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம் உரிய விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குடிமக்கள் சுதந்திரத்திற்கான மக்களின் ஒன்றியம் என்ற தன்னார்வ அமைப் தொடுத்திருந்த பொதுநல வழக்கின்மீது நடைபெற்ற விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் உள்ளடங்கிய அமர்வு உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கிற்காக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் சமீபத்தில் மட்டும் உத்தரபிரதேசத்தில் 500 க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்றார்.

இந்த அமர்வு, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வேண்டுகோளை ஏற்கவில்லை, இது தொடர்பாக மாநில அரசுக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையில் ஆய்வுக்குழு ஒன்றை உருவாக்கவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தை இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்குமாறு மனுதாரர் விடுத்த கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. கோடை விடுமுறைக்குப் பிறகு முதன்முதலாக உச்சநீதிமன்றத்தில் காலை அமர்விலேயே இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து