முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய இ.பி.எஸ். ஓ.பி.எஸ். ஆகியோருக்கு நன்றி மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

மதுரை- மதுரை புறநகர் மாவட்ட  அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட  செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.சிறப்புரை ஆற்றினார். இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ)செல்வம், நிர்வாகிகள் அம்பலம், பஞ்சம்மாள், தக்கார் பாண்டி, செல்லப்பாண்டி, ராமகிருஷ்ணன், பிச்சைராஜன், முருகேசன்,வெற்றிச்செழியன், அலங்கை ரவிச்சந்திரன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், இரா.முத்துக்குமார், முனியாண்டி,கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல்,பூமாராஜா, துதிதிருநாவுக்கரசு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.                                                                                                                                             
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு:-
 தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி நதிநீர் பிரச்சனையில் முதன் முதலாக 1986 - ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சென்று காவிரி பிரச்சனைக்கு முதன்முதலாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.அதனைத்தொடர்ந்து அம்மா 1991ம் ஆண்டு காலம் முதல் காவிரிக்காக பல்வேறு போராட்டங்களை செய்தது மட்டுமல்லர்து 1993ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை செயல்படுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தொடர்ந்து 80 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து  மாபெரும் வெற்றி கண்டவர் அம்மா.
      தொடர்ந்து 2001ம் ஆண்டு முதல் 2006 வரை காவிரி இறுதிதீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் மாபெரும் சட்டபோராட்டங்களை நடத்தியது மட்டுமல்லாது 19-02-2013 அன்று காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பை மத்தியஅரசிதழில் வெளியிடச்செய்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார்  மறைந்த முதல்வர் அம்மா.
       காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பை செயல்படுத்தும் வண்ணம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் பங்கீட்டு குழுவையும் அமைக்க 11-11-2013 அன்று மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று மாபெரும் சட்டபோராட்டத்தை நடத்தினார். தற்போது அம்மாவின் மறைவிற்குப்பின் முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் அம்மா வழியில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சட்டபோராட்டங்களை நடத்தினார்கள். இதன் பலனாக 06-02-2018 அன்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர்பங்கீட்டுக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. தொடர்ந்து இதனை செயல்படுத்த உச்சநீதிமன்றத்தின் மூலம் மத்திய அரசை வலியுறுத்தியதன் காரணமாக 18-05-2018 அன்று காவிரி மேலாண்மை வாரியம் காவிரி நதிநீர்பங்கீட்டுக்குழுவை மத்திய அரசு அமைக்க ஒப்புதல் அளித்தது.   
    அதனையொட்டி 02-07-2018 அன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆணையத்தின் முதற்கட்ட கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜுன்மாதம் வழங்கும் தண்ணீரின் அளவான 31.24 டி.எம்.சியை உடனடியாக திறக்க ஆணையிட்டது. இதன் மூலம் அம்மாவின் வழியில் தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்தி காவிரியில் 125 ஆண்டுகால போராட்டத்தில் மாபெரும் தேடித்தந்து தமிழக விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மதுரை புறநகர் மாவட்ட  அ.தி.மு.க. சார்பில் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.  
         இந்தியாவிலேயே முதன்மை தேசமாக தமிழகத்தை உருவாக்கும் வண்ணம் தொடர்ந்து பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வந்த அம்மா மருத்துவதுறையில் புதிய சகாப்தம் படைத்திருக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில்உருவாக்க 2013அன்று சட்டசபையில் 110விதியின் கீழ் அறிவித்து தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்கள். அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் உருவாக்கிட  முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பாரதபிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அதனையொட்டி 20-06-2018 அன்று ரூ.1500 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை புறநகர் பகுதியிலுள்ள தோப்பூரில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது.அம்மாவின் எண்ணத்தை நனவாக்கிய பாரதபிரதமருக்கும்,  தமிழக முதலமைச்சருக்கும்,  துணை முதலமைச்சருக்கும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் இக்கூட்டத்தின் வாயிலாக கோடான கோ நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
   காவிரி பிரச்சனையில் தன் சுயலாபத்திற்காக 1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து மாபெரும் துரோகத்தை தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்தது மட்டுமல்லாது தொடர்ந்து அம்மா காவிரிக்காக போடப்பட்ட வழக்கில் 2007ம் ஆண்டு தீர்ப்பு வந்த போது அந்த தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாமல் கிடப்பில் போட்டு தொடர்ந்து அடுக்கடுக்கான துரோகத்தை செய்து அந்த துரோகத்தை மறைக்க காவிரி நதிநீர் பிரச்சனையில் பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை பரப்பி அதன் மூலம் அரசியல் விளம்பரம் தேடிய ஸ்டாலின் முகத்திரையை அம்மாவின் அரசு கிழித்தெறிந்தது. மக்களின் வேண்டுகோள் படி 29-03-2013அன்று ஸ்டெர்லைட் ஆலையின் மிண் இணைப்பை துண்டித்து ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் அம்மா.ஆனால் ஆலையின் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் மீண்டும் ஆலையை இயக்கியது அம்மா வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வரும் இந்த அம்மாவின் அரசு மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் ஸ்டெர்லைட் ஆலைக்கு  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அனுமதி மறுக்கப்பட்டும், மின் இணைப்பை துண்டித்தும் 06-06-2018 அன்று ஆலையை நிரந்தரமாக மூடிய அம்மாவின் அரசுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 12-03-2009ம் ஆண்டு 230 ஏக்கர் நிலம் கொடுத்தது அப்போதிருந்த தி.மு.க. அரசு.மத்திய அமைச்சராக ராஜா இருந்த போது அந்த ஆலையின் நிர்வாகத்திற்கு ஒப்புதல் அளித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்து தற்போது ஸ்டெர்லை ஆலை பிரச்சனையில் மக்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்து வரும் ஸ்டாலினை ஒரு போதும் மக்கள் நம்ப மாட்டார்கள். தொடர்ந்து இது போன்று அம்மாவின் அரசுக்கு எதிராக பொய்பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க.வின் செயல்படாத தலைவர் ஸ்டாலினை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
 இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மறைந்த முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் தனது இறுதி உரையில் தனது லட்சியத்தை எடுத்துரைத்தார். அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவது கடைக்கோடியில்  தொண்டனாக இருக்கும் அனைவரின் கடமையாகும். ஆகவே கழக அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துரைத்து அ.தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து எதிர்கட்சிகளின் பொய்பிரச்சாரங்களை நாம் முறியடித்து கழகத்தை வலிவோடும், பொலிவோடும் கட்டிகாப்பாற்றி அம்மாவின் புகழை காப்பாற்றி வரும் முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகரில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகள் தோறும் வாக்குச்சாவடி முகவர்களை விரைவாக நாம் அமைத்து வரும் தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றி அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றியினை பெற்றுத்தர சபதம் மேற்கொள்வோம். இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து