முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைக்குப் பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் தொடரில் களம் இறங்கினார் வார்னர்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற டேவிட் வார்னர், முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் கிரிக்கெட்டில் களம் இறங்கியுள்ளார்.

ஓராண்டு தடை..

ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவாகரம் விஷ்வரூபம் எடுத்தது. இதில் தொடர்புடைய டேவிட் வார்னருக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

விளையாட அனுமதி...

இதனால் சர்வதேச போட்டியிலும், ஐபிஎல் தொடரில் வார்னர் பங்கேற்கவில்லை. அதன்பிறகு வெளிநாட்டில் நடைபெறும் லீக்கிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகவும் குறைந்த லெவல் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. சமீபத்தில் கனடா சென்று கனடா குளோபல் டி20 லீக் தொடரில் விளையாடினார். இந்நிலையில் இன்று முதன்முறையாக தடைக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் வார்னர் கலந்து கொண்டு விளையாடினார்.

36 ரன்கள் எடுத்தார்....

டார்வினில் ஸ்ட்ரைக் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் சிட்டி சைகுளோன் அணிக்காக விளையாடி 32 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். ‘‘நான் இங்கு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறேன். அதை நான் விரும் செய்துகிறேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து