முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருவாண்டா மக்களின் மாட்டு சாண ஓவியம்

புதன்கிழமை, 25 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ருவாண்டா, ருவாண்டா நாட்டில் மாட்டு சாணம் மூலம் செய்யப்படும் கலை பொருட்கள் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. இமிகாங்கோ ஓவியம் என்று அழைக்கப்படும் மாட்டு சாண ஓவியத்தை வாங்க மக்கள் பெரிய அளவில் காத்து இருக்கிறார்கள்.

சாணத்தை தண்ணீர் ஊற்றி பதப்படுத்தி, அதில் வண்ணம் சேர்த்து, கெட்டியான பெயிண்ட் போல மாற்றுகிறார்கள். சிமெண்ட் போல இருக்கும் இதை வைத்து சுவற்றில் மாற்றும் வகையில் அழகான கலை பொருட்களை ருவாண்டா மக்கள் உருவாக்குகிறார்கள்.

18-ம் நூற்றாண்டில் உருவான இந்த கலையை அந்நாட்டின் அரசன் கிகாம்பியின் மகள் காகிறா இதை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். 1994-ல் நடந்த ருவாண்டா போரில் மக்களை எல்லாவற்றையும் இழந்த போது அவர்கள் இந்த கலையையும் இழந்து இருக்கிறார்கள். ஆனால் 2000- ல் இந்த கலை மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இதை பார்க்க துளி அளவு கூட சாணம் போல இருக்காது. அப்படியே கண்ணை பறிக்கும் வகையில் கலர் கலராக இதை உருவாக்குகிறார்கள். உலகின் பெரிய 5 நட்சத்திர ஓட்டலில் இதை வைக்க வேண்டும் என்று வாங்கி செல்கிறார்கள். இணையத்திலும் இதற்கு அதிக மதிப்பு வைத்து விற்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து