முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைகளை தகர்த்து சாதனைப் படைக்க இளைஞர்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: தடைகளை தகர்த்து இளைஞர்கள் சாதனைப் படைக்க வேண்டும்  என்று பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்வில் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக மக்களுடன் உரையாடும் மனதின் குரல் 46-வது நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
ஜூலை மாதம் இளைஞர்களுக்கு மிக முக்கிய மாதமாகும். ஏனென்றால் இப்போது தான் ஒவ்வொருவரும் கேள்வித் தாள்களில் இருந்து கட் ஆப் மதிப்பெண்களுக்கும், வீட்டில் இருந்து விடுதிகளுக்கும், பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து ஆசிரியர்களின் அறிவுரைகளுக்கும் மாறும் நேரமாகும்.

இந்த நேரத்தில் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் நேரமாகும். உங்கள் எதிர்காலத்தின் தேடல் தொடங்கும் நேரமிது. தங்களின் கல்லூரி நாட்களை நினைத்து இளைஞர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதே பழைய நட்பு மிகவும் சிறந்தது. அதுபோல புதிய நண்பர்களைத் தேர்வு செய்யும் போது அதில் நிறைய தேடல்கள் இருக்க வேண்டும்.

இளைஞர்கள் அனைவரும் தடைகளை தகர்த்து சாதனைப் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இதன்மூலம் நமது சமூகத்துக்கு முன்மாதிரியாக இருந்து புதிய வழிகாட்டுதலை ஏற்படுத்த முடியும். மேலும் நமது பாரம்பரியங்களுடன் இணைந்திருக்க வேண்டும். இதற்கு இந்தியாவில் பலர் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். புதிய இந்தியாவில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து