முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் பாதுகாப்புடன் 20 கிலோ நகை அணிந்து கன்வர் யாத்திரை செல்லும் தங்க பாபா

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தங்க பாபா என்று அழைக்கப்படும் சாமியார் கடந்த 25 ஆண்டுகளாக தங்க நகைகள் அணிந்து கொண்டு கன்வர் யாத்திரை மேற்கொள்கிறார். இந்த ஆண்டு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ தங்க நகை அணிந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

வட மாநிலங்களில் ஆண்டுதோறும் நடக்கும் கன்வர் யாத்திரையின் போது சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சேகரித்து சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்வது வழக்கம். கடந்த 25 ஆண்டுகளாக இந்த யாத்திரையில் தங்க பாபா என்று அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சுதிர் மக்கார் கலந்து கொள்கிறார்.

ஹரித்வாரில் இருந்து ஏராளமான தங்க நகைகளை அணிந்து கொண்டு தனது காரின் மேல் நின்று கொண்டு மக்களைப் பார்த்து கையசைத்தபடி செல்கிறார் தங்க பாபா. அவருக்கு சொந்தமாக உள்ள  பி.எம்.டபிள்.யூ கார், 3 பார்ச்சூனர் கார்கள், 2 ஆடி கார்கள், 2 இன்னோவா கார்கள் என சொகுசு கார்கள் அவர் செல்லும் காரை பின்தொடர்கின்றன. ஆண்டுதோறும் அவர் அணியும் நகைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவருடன் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் செல்கின்றனர். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் தவிர, 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சும் அணிந்து கொள்கிறார். உ.பி. காசியாபாத்தில் உள்ள இந்திராபுரத்தில் வசதியான பிளாட்டும் அவருக்கு உள்ளது.

சிறு வயதில் சுதிர் மக்கார் வறுமையில் வாடியிருக்கிறார். ஹரித்வாரில் சாலையோரத்தில் ஜெபமாலைகளையும், துணிகளையும் விற்றுள்ளார். பின்னர், டெல்லியில் காந்திநகர் மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரமும் ரியல் எஸ்டேட் வியாபாரமும் சூடு பிடித்து செல்வந்தரானார். பின்னர் அவரது மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து