எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது.
285 ரன்கள்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (80 ரன்), பேர்ஸ்டோ (70 ரன்) அரைசதம் அடித்தனர்.
அஸ்வின்...
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே முகமது ஷமியின் பந்து வீச்சில் சாம் குர்ரன் (24 ரன்) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
முரளி விஜய்...
பின்னர் இந்திய அணியின் முதல் இன்னிங்சை முரளி விஜயும், ஷிகர் தவானும் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்து குடைச்சல் கொடுத்தனர். அவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் (13.4 ஓவர்) பிரிந்தது.
இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 20 வயது சாம் குர்ரனின் பந்து வீச்சில் முரளிவிஜய் (20 ரன், 45 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். அதே ஓவரில் அவரும் காலியானார். ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை அடித்த போது, அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்னுடன் நடையை கட்டினார்.
கார்த்திக் ஏமாற்றம்
அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். மறுமுனையில் தட்டுத்தடுமாறிய ஷிகர் தவானுக்கும் (26 ரன், 46 பந்து, 3 பவுண்டரி) குர்ரன் ‘செக்’ வைத்தார். அவரது பந்தில் ஷிகர் தவான் ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரஹானே களம் இறங்கினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 76 ரன்களுடன் பரிதவித்தது.
அணியின் ஸ்கோர் 27.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டிய போது ரஹானே (15 ரன், 34 பந்து, ஒரு பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஜென்னிங்சிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (0) வந்த வேகத்திலேயே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பாண்ட்யா 22 ரன்
இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். ஹர்திக் பாண்ட்யா ரன் கணக்கை தொடங்கும் முன்பே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தார். அப்பீல் செய்ததில் அவர் அவுட்டில் இருந்து தப்பினார். அடுத்த ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை விராட்கோலி அடித்து ஆட முயல அது எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானை நோக்கி சென்றது. அவர் அந்த அருமையான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். அப்போது விராட்கோலி 21 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்த ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்தார். இந்த முறை ஸ்லிப்பில் நின்ற அலஸ்டயர் குக் நல்ல கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார்.
ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2 முறை ‘அவுட்’ ஆபத்தில் இருந்து அதிர்ஷ்டவசத்தால் தப்பிய ஹர்திக் பாண்ட்யா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஹர்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன் எடுத்த நிலையில் குர்ரன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.
விராட்கோலி சதம்
இதனை அடுத்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கேப்டன் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 100 பந்துகளில் 9 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து அஸ்வின் (10 ரன், 15 பந்து, 2 பவுண்டரி), முகமது ஷமி (2 ரன்) ஆகியோர் விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா (5 ரன்) அடில் ரஷித் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து உமேஷ் யாதவ் களம் இறங்கினார்.
ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடிய விராட்கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார். முதலில் சற்று தடுமாறியதுடன், கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய விராட்கோலியின் ஆட்டம் போகப்போக சூடுபிடித்தது. நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி, 65-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி சதத்தை எட்டினார். அவர் 172 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் விராட்கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். சதம் அடித்ததும் உரக்க சத்தமிட்ட விராட்கோலி தனது கழுத்தில் செயினில் அணிந்து இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தார்.
இந்திய அணி 274 ரன்
சதம் அடித்த பிறகும் விராட்கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அடில் ரஷித் பந்து வீச்சில் ஷாட் பிட்ச் ஆகி வைடாக சென்ற பந்தை விராட்கோலி அடித்து ஆடினார். அது ஸ்டூவர்ட் பிராட் கையில் தஞ்சம் அடைந்தது. விராட்கோலி 225 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 76 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. உமேஷ் யாதவ் 1 ரன்னுடன் (16 பந்துகளில்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
2-வது இன்னிங்ஸ்...
13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 14 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.