முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் பாதை: திக் விஜய் சிங்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால் : மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் பாதை அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஆளும் பா.ஜ.க. அரசு ராமர் பாதையை அமைப்போம் என்று அறிவித்தது. ஆனால் தனது வாக்குறுதியை அக்கட்சி நிறைவேற்றவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்தியப் பிரதேசத்தின் எல்லை வரை ராமர் பாதையை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

காங்கிரஸ் மென்மையான இந்துத்துவா போக்கைக் கடைப்பிடிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்துத்துவாவில் மென்மை, கடினம் என்று எதுவும் இல்லை. இந்து மதத்தை வைத்து இந்துத்துவா செயல்படவில்லை என்றார்.

ராமாயணத்தில், ராமர் வனவாசம் மேற்கொண்டபோது சென்ற பாதை ராமர் பாதை என அழைக்கப்படுகிறது. இந்த வனப் பாதை மத்தியப் பிரதேசத்தின் சத்னா, பன்னா, ஷதோல், ஜபல்பூர் மற்றும் விடிஷா மாவட்டங்களைக் கடந்து செல்கிறது.  இந்த ஆண்டின் இறுதியில் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து