முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பெட்ரோல், டீசலின் விலையை நீதிமன்றம் குறைக்க முடியாது, மத்திய அரசுதான் அதில் முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சில மாதங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க கோரி சில நாட்களுக்கு முன் டெல்லியை சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி கே ராவ் விசாரித்தனர். இதில் தற்போது முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த முடியாது. இதை செய்வது எங்களுடைய வேலை கிடையாது. இது அரசின் பொருளாதார கொள்கை தொடர்பானது. இதில் பல விஷயங்களை மாற்றி அரசுதான் விலையை குறைக்க வேண்டும். இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட முடியாது என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அதேசமயம் பெட்ரோல் விலைஉயர்வுக்கு காரணம் கேட்டு அதன்படி மத்திய அரசு இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நவம்பர் 16- ம் தேதிக்கு டெல்லி  ஐகோர்ட் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து