முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பேருந்து விபத்து பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப் பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்தது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைத்தொடர்ந்து, பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. இதற்கிடையே, பேருந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் சீனிவாசராவ் சென்ற வாரம் சிறந்த ஓட்டுனர் விருது வாங்கியவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து