முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

அருப்புக்;கோட்i- தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை கோவில்களிலும் வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து அருப்புக்கோட்டையில் பாலையம்பட்டி டி.எஸ்.பி.அலுவலகம், மணிநகரம், புளியம்பட்டி, பந்தல்குடி ரோடு உள்பட 13 இடங்களில் இந்து முன்னனி சார்பில்  விநாயகர் சிலைகள் வைத்து கடந்த 2 நாட்களாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு பாலையம்பட்டியிலிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் புதிய பேருந்து நிலையம் வந்தவுடன் மேளதாளங்களுடன் வந்த ஊர்வலத்தை நிறுத்தி  போலீசார் ஊர்வலம் செல்லும் பகுதியில் மசூதி உள்ளதால் மேளங்களை வாங்கி கொண்டனர்.     பதட்டமான பகுதியான முஸ்லீம் பஜார் மசூதி பகுதியில் கூடுதல் போலீசார் மசூதிகளிலும், வணிக வளாககட்டிடங்களிலும் நிறுத்தப்பட்டும், சி.சி.டி.வி. மூலம் கண் காணிப்பு பணிகளை மேற்க்கொண்டனர்.  ஊர்வலம்  ஆழக்கரிசி விநாயகர் கோவில் வந்தவுடன்  மேளங்கள் முழங்க விநாயகர் ஊர்வலம்   சிவன்கோவில், காசுக்கடை பஜார்,பந்தல்குடி ரோடு அடைந்தது. பின்னர் இந்து முன்னனி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இந்து முன்னனிதலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சங்;கையா முன்னிலை வகித்தார். ஆத்திபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாநில பொது செயலாளர் கர்த்திகேய வெங்கடாஜலபதி,   கோட்ட செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் ராஜா, பிரபு உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.   அசம்பாவித சம்பவங்கள் ஏற்படா வண்ணம் தடுக்க வஜ்ரா வாகனம், தீயணைப்பு துறை வாகனம், அதிரடிப்படை போலீசாரும் அணி வகுத்து சென்றனர்.   ஊர்வலத்திற்க்கான பாதுகாப்பு பணிகளை எஸ்.பி. ராஜராஜன் தலைமையில் ஏ.டி.எஸ்.பிக்கள் ஞானசிவக்குமார், முகமது அஸ்லாம், டி.எஸ்.பிக்கள் சங்கர், மதியழகன், விஜயகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், அன்னராஜ், செல்லப்பாண்டி உள்பட ஆயிரத்திறக்கும் மேற்பட்ட போலீசார் பணியில்  ஈடுபட்டனர். பின்னர் அனைத்து விநாயகர் சிலைகளும் அனைத்தையும் கொண்டு சென்று  பந்தல்குடி ரோட்டில் உள்ள பெரிய கண்மாயில் கரைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து