எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி- தேனி மாவட்டம், சின்னமனூர் நகர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சின்னமனூர் நகர் கழக செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் கண்ணன், இளநீர்ராமர், செல்வம், தீபஜோதி செல்விமதிவாணன், அகிலன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், தலைமைகழக பேச்சாளர்கள் குமரிபிரபாகரன், குறள்பித்தன், டி.வி.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ பேசும்போது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை மற்ற திராவிட கட்சிகள் கொண்டாடினாலும், அவரின் புகழை நிலைநிறுத்துகின்ற, கொண்டாடுகின்ற உரிமை, தகுதி நமது கழகத்திற்கு மட்டுமே இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றலை பார்த்து, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் உள்ளிட்ட மாமேதைகளுக்கு சமமாக பேரறிஞர் அண்ணா அவர்களை தென்னாட்டு பெர்னாட்ஷா என்றும் இந்நாட்டு இங்கர்சால் என்று பெருமையாக அழைக்கப்பட்டார். தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா அவர்கள் தனது எழுத்தாற்றல், பேச்சாற்றலால், தமிழர்களின் வீரத்தை விவேகத்தை, உயரிய பண்புகளை நிரூபிக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பாடுபட்டார். சுதந்திர இந்திய நாட்டில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலையை தனது பேச்சாற்றல், எழுத்தாற்றலால் உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. அவர் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவின் மிகச்சிறந்த பேச்சாற்றலை கண்டு வியந்து அவரை தொடர்ந்து பேச அனுமதித்தவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால்நேரு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு போன்ற அண்ணாவின் கருத்துக்கள் தமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்த அற்புத தலைவரின் வழியிலே நான் நடப்பேன் என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சிக்காலத்திலே தான் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா போக்குவரத்து கழகம், அண்ணா மாவட்டம் என அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்டது. அண்ணா அவர்கள் தேர்தலில் பசி பட்டினியை போக்கும் வகையில் 3 படி லட்சியம் 1 படி நிச்சயம் என்று கூறி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதை செய்து காண்பித்தார். சென்னை கோவையில் எரியாத வீடுகளை ஏழை எளியோருக்கு கட்டி தந்தார். உலக தமிழ் மாநாட்டை நடத்தி காண்பித்தார். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னால் தனது சூழ்ச்சியால் கருணாநிதி திமுக தலைவரானார். அதனை தொடர்ந்து திமுகவை தனது குடும்ப கட்சியாக மாற்றினார். இதனை எதிர்த்த புரட்சித்தலைவரை கருணாநிதி வெளியேற்றினார். பின்னர் புரட்சித்தலைவர் அதிமுகவை ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் புரட்சித்தலைவர் மிகப் பெரிய வெற்றி பெற்றார். தற்போது புதிதாக கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினி, கமல் ஆகியோர் கட்சி ஆரம்பிக்கவே 3 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் இவர்கள் இடைத்தேர்தலை தைரியமாக சந்திப்பார்களா? தமிழகத்தின் தலையாய பிரச்னைகளான காவேரி, கண்ணகி கோவில், முல்லைபெரியாறு, கச்சத்தீவு, மீனவர், இலங்கை தமிழர்கள் என அனைத்து பிரச்னைகளிலும் தமிழக மக்களை காப்பாற்றும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டரீதியாக பல போராட்டங்களை நடத்தி தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தந்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஏராளமான அற்புதமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். இது போன்ற திட்டங்களை இனி யாராலும் முறியடிக்க முடியாது. அதன் பயனாக இன்று தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னால் நமது இயக்கத்தை, ஆட்சியை சிதைத்து விடலாம், சின்னத்தை முடக்கி விடலாம் என டிடிவி தினகரன் உட்பட பலரும் திட்டமிட்டார்கள். பொய் வழக்கு போட்டனர். முடிந்ததா? தற்போது 19 மாதங்களை கடந்து நமது கழக ஆட்சியை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இடையில் ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் சிறிது ஏமாந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. வரும் தேர்தல்களில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற நமது இயக்கம் மாபெரும் வெற்றியை பெறும் என்று சிறப்புரையாற்றினார்.
கம்பம் நகர அவைத்தலைவர் காந்தி, துணை செயலாளர் ஆசிக்அகமது, மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.