முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெய்வீகமாக பணி செய்யவில்லை ! அர்ச்சகர்கள் எல்லாம் ரோபோக்கள் போல் செயல்படுகிறார்கள்: சென்னை ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றாமல் ரோபோக்கள் போல் பணியாற்றுகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை மாயம் என மனு அளிக்கப்பட்டது. வாயில் பூவுடன் கூடிய மயில் சிலைக்கு பதில், பாம்புடன் உள்ள சிலை வைக்கப்பட்டது. சிலை மாறியது தொடர்பாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னை வனநாதர் சன்னதியில் காணாமல் போன மயில் சிலைக்கு பதில் புதிய சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் சிலை மாயமானது தொடர்பான பொதுநல வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சிலை மாறியிருப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது அர்ச்சகரின் கடமை என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர்கள் தெய்வீக பணிகளை சரியாக ஆற்ற வேண்டுமெனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றாமல் ரோபோக்கள் போல் பணியாற்றுகிறார்கள் என்றும் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து