முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை  மத்திய அரசு அறிவித்துள்ளது. 

குத்துச்சண்டை பயிற்சியாளர் சுபேதர் குட்டப்பாவுக்கு துரோணாச்சார்யா விருது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதும்,  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜூவ் கேல் ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.தடகளம் நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு ராஜூவ் கேல் ரத்னா, 8 பேருக்கு துரோணாச்சார்யா, 20 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து