முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருந்தார் அபிலாஷ். இந்திய குழுவிற்கு இவர்தான் கேப்டனாக செயல்பட்டார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் பாய்மர படகுகளை கொண்டு நடத்தப்பட்ட பந்தையம் இதுவாகும். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 1900 கடல் மைல் தொலைவில், அபிலாஷ் படகில் பயணித்த போது திடீரென மாயமாகி விட்டார்.

இந்த பந்தயம் பிரான்ஸ்சில் ஜூலை மாதம் 1-ம் தேதி துவங்கி, உலகம் முழுக்க சுற்றும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்த உலகம் சுற்றும் போட்டியில்தான் அபிலாஷ் பங்கேற்றிருந்தார். ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அமைப்பினர் அபிலாஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து