முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய தேசிய கீத பாடலை உருக்கமாக பாடிய பாக். ரசிகர்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய், துபாயில் நடந்து வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 19-ம் தேதியன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதை பார்ப்பதற்காக இந்தியா, பாகிஸ்தானை சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன் இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது.

இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மிக உருக்கமாகவும், சத்தமாகவும் இந்திய தேசிய கீத பாடலை பாடினார். இதை தானே வீடியோவும் எடுத்துள்ளார். கறுப்பு நிற ஆடை அணிந்து, கழுத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியை அணிந்திருந்த அந்த இளைஞர் இந்திய தேசிய கீதத்தை பாடியதை அருகில் இருந்த மற்ற ரசிகர்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் பார்த்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து